கந்தநாதன்
வளைய வளைய வரும் பிள்ளையின் நினைவில் தான்
நெளிய வளர்ந்து நிற்கும் நீண்ட பல கட்டடங்கள்!
எளியோர் எம் கை வண்ணத்தில் உருவான உயரக் கொட்டடிகள்!
பறந்து போன வாழ்க்கையினை நினைத்துப் பாலையிலே
வெள்ளிக்கிழமையில் மலர்ந்த எங்கள் பெரிய முகங்கள்!
வெள்ளையுள்ளத்தோடு உறவுகளோடு பரிமாறும் சோகங்கள் சுகங்கள்!
நேசிப்பவர்களை மட்டுமே நெஞ்சில் ஏற்றபடி என்றும்
நெற்றியிலே வடிகின்ற முத்துக்கள் எங்கள் சாயப்பூக்கள்!
சற்றும் கவலைப்படாமல் வாழ்கின்ற வியர்வை வாசனைப்பூக்கள்!
வேலைப்பளுவில் எங்கள் வாழ்வோ பட்ட மரமாகிறது;
வீட்டு நினைவுகள் வந்து வந்து வேதனை தருகிறது;
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற உண்மை புரிகிறது!
கட்டி முடித்திடத் தான் கனவு! கட்டிய கட்டடங்கள் சொல்லும்!
பட்டப்படிப்பு படித்திருந்தால் இத்தனைகோடி ஏக்கங்கள்
வட்டத்தில் விழுந்த பிறகு இன்றோ வெளி வர இயலாத கேலிக்குறி!
கண்ணுக்குள்ளே தேங்கி நிற்கும் கலங்கரை விளக்காய் வீட்டு நினைவுகள்!
மணவாழ்க்கை என்பதெல்லாம் முடிந்துபோன கண வாழ்க்கை!
சுகந்தேடும் வானம்பாடிகள்! வாழ்க்கை தேடும் நாடோடிகள்